தமிழில் கணினி செய்திகள்

நெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை நீக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in , at October 28, 2010
நெருப்புநரி உளவியின் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடுகிறோம். இவ்வாறு நாம் வலை பக்கங்களை பாரவையிடும் போது பல தளங்கள் பயனர் கணக்கு இருந்தால் மட்டுமே தனது சேவையினை பயன்படுத்த அனுமதிக்கும். இவ்வாறான சூழ்நிலையில் நாம் பல பயனர் கணக்குகளை பயன்படுத்தி வருகிறோம். நெருப்புநரி உளவியினை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை சேமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக சொந்த கணினி வைத்திருந்தால் பராவயில்லை ஆனால் அலுவலகத்திலோ அல்லது ப்ரவுசிங் சென்டரிலோ இணையதளத்தினை பார்வையிடும் போது தவறுதலாக Bank அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்ட் நமக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலே கணினியில் பதியப்பட்டுவிடும் இது போன்ற சூழ்நிலையில் நாம் சாதரமாக History யை மட்டும் கிளியர் செய்தால் போதாது, எனவே இதுபோன்ற பதியப்பட்ட பாஸ்வேர்டினையும் அகற்ற வேண்டும். 

இதற்கு Tools > Options என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் சாளர பெட்டியில் Security என்னும் டேப்பினை தேர்வு செய்யவும். அதில் Saved Passwords என்னும் பொத்தானை அழுத்தவும்.



இப்போது நெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றை தேர்வு செய்து கொண்டு Remove All என்னும் பொத்தானை அழுத்தவும் இப்போது நெருப்புநரி உளவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லானது நீக்கப்பட்டுவிடும், இனி நீங்கள் எந்தவித பயமும்  இன்றி இணையதளத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உலாவர முடியும்.

1 Comments:

Post a Comment